NATIONAL

மாலை 5 மணி வரை சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், மார்ச் 25: மாலை 5 மணி வரை சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அம்மாவட்டங்கள் சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகியவையாகும். மேலும், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலையே எதிர்நோக்கக் கூடும் என்று ட்விட்டர் மூலம் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பினாங்கு, பேராக், பகாங், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் என கணிக்கப்பட்டு எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :