NATIONAL

பண மோசடி கும்பலால் RM194,210 இழப்பு

அலோர் காஜா, மார்ச் 28: பணமோசடி கும்பலால் ஓய்வு பெற்ற ஒருவர் RM194,210 ஏமாற்றப்பட்டுள்ளார்.

அலோர் காஜா மாவட்டக் காவல்துறை தலைவர் சுப்ரிட்டன் அர்ஷாட் அபு கூறுகையில், பாதிக்கப்பட்டவர்  50 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆவார். டிசம்பர் 21 அன்று இரவு 8.30 மணி அளவில் பாதிக்கப்பட்ட அப்பெண் தனது வீட்டில் இருந்தபோது வழக்கறிஞர் என்று கூறிக்கொண்ட ஃபரிதா என்ற பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

“முன்னாள் அரசு நிறுவன குமாஸ்தாவாக பணிபுரிந்து உள்ள பாதிக்கப்பட்ட பெண், சிலாங்கூரில் உள்ள அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தை தொடர்பு கொள்வதற்கு முன்பு, அவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அக்குற்றத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்ததாகவும், ஆனால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரிடம் உள்ள நிலுவைத் தொகை உட்பட அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் அப்பெண் கூறினார்.

பாதிக்கப் பட்டவருக்குப் புதிய வங்கிக் கணக்கை உருவாக்கி, விசாரணை நோக்கங்களுக்காக அவரது அனைத்து பணத்தையும் புதிய கணக்கிற்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அப்பெண் தெரிவித்தார்.

சிண்டிகேட்டால் ஏமாற்றப் பட்டதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர் 28 டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2, 2023 வரை தனது RM194,210 தொகையை படிப்படியாக வேறு வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார். பின் ஜனவரி 6 அன்று அனைத்து பணமும் மூன்றாம் தரப்பு வங்கி கணக்கிற்கு முழுமையாக மாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார் என்று அர்ஷாட் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர் மார்ச் 24 அன்று மஸ்ஜிட் தனா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், மோசடி நடவடிக்கை குற்றவியல் சட்டப் பிரிவு 420வது கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டதாகவும் அர்ஷாட் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :