NATIONAL

உலு சிலாங்கூர், கோம்பாக் மாவட்டங்களில் இன்று பிற்பகல் 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 3: உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் இன்று பிற்பகல் 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ள பல மாவட்டங்கள் மற்றும் சபாவின் பல பகுதிகளையும் இதே வானிலைதான் இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களும் இடியுடன் கூடிய கனமழையை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, அது ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கு மேல் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :