புத்ரா ஜெயா, ஏப் 5- மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் குறைகளைக் கேட்டறியும் சந்திப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி புதன்கிழமை புத்ரா ஜெயாவில் உள்ள மனித வள அமைச்சின் கட்டடத்தில் நடைபெறுகிறது. காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12. 00 மணிவரை நடைபெறும் இந்த சந்திப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனித வள அமைச்சர் வ. சிவகுமாரிடம் முன் வைக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/04/unnamed-42-960x960.jpg)