NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப். 19ஆம் தேதி பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை

ஷா ஆலம், ஏப்ரல் 11- விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு  வரும்  ஏப்ரல் 19-ஆம் தேதியை கூடுதல் விடுமுறையாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த கூடுதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வியமைச்சர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது .

பிரிவு  ஏ மற்றும்  பிரிவு பி  பள்ளிகளில் ஏப்ரல் 19 அல்லது புதன்கிழமை கூடுதல் விடுப்பு வழங்க கல்வியமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது  என்று ஃபட்லினா சீடெக்  தெரிவித்துள்ளார்.

Pengarang :