NATIONAL

கிளந்தான், ஜொகூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் காற்று தூய்மை கேடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 17: கிளந்தான், கோலாலம்பூர் மற்றும் ஜோகூரில் உள்ள பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (எபிஐ) அளவீடுகள் பதிவாகியுள்ளன.

காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின் அடிப்படையில், செகாமட், ஜோகூர் நேற்று மதியம் 4 மணி நிலவரப்படி ஐபியு 152 இன் ஆரோக்கியமற்ற காற்றின் தர நிலையைப் பதிவு செய்தது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி சிராஸ், கோலாலம்பூர், கிளந்தான் கோத்தா பாரு, தனா மேரா  ஆகியவை முறையே 106, 107 மற்றும் 104 ஐபியு அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன.

பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட ஐபியு நல்ல காற்றின் தரமாகும், 51 முதல் 100 (மிதமானது), 101 முதல் 200 (ஆரோக்கியமற்றது), 201 முதல் 300 (மிகவும் ஆரோக்கியமற்றது) மேலும் 300 மற்றும் அதற்கு மேல் (ஆபத்தானது) ஆகியவற்றைக் குறிக்கிறது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தனது டிக்டோக் கணக்கில் பதிவேற்றிய வீடியோவின் மூலம் செக்கிஞ்சாங்கில் உள்ள கட்டிடத்தின் நிலையைக் காட்டினார்,  கண்ணுக்கு தெரியாத அளவுக்கு  200 மீட்டருக்கும்  அப்பல்  உள்ள கட்டடம்  காட்டப்பட்டது.

“கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட செய்திகளை நாங்கள் கேள்விப்பட்டோம், மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எனது சொந்த தொகுதியான செக்கிஞ்சாங், செகா மாட்டில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

முந்தைய நிலவரப்படி 145 முதல் 150 வரையிலான ஆரோக்கியமற்ற சிபிஐ வாசிப்பைப் பகிர்ந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைச் செய்யும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

“இந்த புகைமுட்டம் உண்மையில் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் கண் எரிச்சல், மூக்கு அரிப்பு, தொண்டை புண், இருமல், காய்ச்சல் மற்றும் தோல் அரிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

நீண்ட கால விளைவுகள் இருதய நோயையும் ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

மேலும், பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளை வீட்டிலேயே இருக்குமாறு அவர் நினைவுபடுத்தினார்.


– பெர்னாமா


Pengarang :