SELANGOR

உலு சிலாங்கூர் நகராட்சி மலேசியா புக் ஆஃப் ரெக்கார்டில் (MBOR) அங்கீகாரம் பெற்றது

ஷா ஆலம், ஏப்ரல் 16: உலு சிலாங்கூர் நகராட்சி (எம்பிஎச்எஸ்), லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் மாத கருத்தரங்கை (WLAM) வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்டில் (MBOR) அங்கீகாரத்தைப் பெற்றது.

3 ஏப்ரல் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு இருந்த லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் மாத கருத்தரங்க கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த முதல் உள்ளூர் நிர்வாகமாகும்  இது  (PBT) .

‘லிவிங் வோட் அண்ட் நேச்சர்’ மூலம் உலு சிலாங்கூர் மாநகராட்சி இந்த அங்கீகாரத்தை பெற்றது.

யாங் டிபெர்துவான் முகமட் ஹஸ்ரி நோர் முகமட், நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கும் அங்கீகரிப்பதற்கும் உலு சிலாங்கூர் மாநகராட்சியின் திட்டங்கள் சிறந்த சாதனை என்று கூறினார்.

“எதிர்காலத்தில் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்ய இந்த அங்கீகாரம் ஓர் ஊக்கமாக இருக்கும்.

“லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் மாத கருத்தரங்கு என்பது அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் லேண்ட் ஸ்கேப் ஆர்கிடெக்ட் (ASLA) மற்றும் இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்ஸ் உடன் (IFLA) இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முழுவதும் ஏற்பாடு செய்யும் ஒரு சர்வதேசத் திட்டமாகும்” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

புக்கிட் பெருந்தோங் கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளாப்பில்  நடந்த இந்நிகழ்வில் திறப்பு விழாவில், மலேசியா புக் ஆஃப் ரெக்கார்டின் பிரதிநிதி சித்தி ஹஜார் ஜொகூர், உள்ளூர் அரசு எஸ்கோ இங் ஸீ ஹான் அவர்களிடம் அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார்.

அதே விழாவில், முதல் உலு சிலாங்கூர் நகராட்சி லேண்ட்ஸ்கேப் புளூபிரிண்ட் (HSLaBP) 2035 அறிமுகப்படுத்தப்பட்டது.

“இந்த வரைபடமானது உலு சிலாங்கூர் மாவட்டத்தில் நிலப்பரப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்புத் திட்டங்களுக்கான முழுமையான வழிகாட்டியாக பயன்படுத்தப்படும்.

“வளர்ச்சியின் வேகம் மற்றும் மக்கள்தொகை அடர்த்திக்கு ஏற்ப பொதுப் பூங்காக்களை உருவாக்க இயற்கை வடிவமைப்பின் வளர்ச்சியைத் திட்டமிடுவதையும் இது உள்ளடக்கியது,” என்று அவர் கூறினார்.


Pengarang :