SELANGOR

கோம்பாக் மாவட்டத்தில் கெம்பாரா மீடியா மற்றும் ஜெலஜா கித்தா சிலாங்கூர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு

செலாயாங், ஏப்ரல் 17: கோம்பாக் மாவட்டத்தில் கெம்பாரா மீடியா மற்றும் ஜெலஜா கித்தா சிலாங்கூர் நிகழ்ச்சிகள் ஐடில்பித்ரியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  செலாயாங் மாநகராட்சி (எம்பிஎஸ்) தலைவர் கூறுகையில், கெம்பாரா மீடியா அட்வென்ச்சர் நிகழ்ச்சி குவா டமாய் எக்ஸ்ட்ரீம், பத்து கேவ்ஸ் மே 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜெலஜா கித்தா சிலாங்கூர் 3 ஆம் கட்ட வணிகப் பகுதியான தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

செலாயாங் மாநகராட்சி மற்றும் மலேசியத் தகவல் துறை இணைந்து நடத்தும் கெம்பாரா மீடியா நிகழ்ச்சியில் 19 நிறுவனங்களைச் சேர்ந்த 30 ஊடக நண்பர்கள் ஈடுபட்டதாக டத்தோ முகமட் யாசிட் சாய்ரி கூறினார்.

“இந்த திட்டத்தின் நோக்கம் செலாயாங் மாநகராட்சி நிர்வாகப் பகுதியில் உள்ள சுவாரஸ்யமான இடங்களை மேம்படுத்த உதவுவதாகும்,” என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்

மேலும், கோம்பாக் மாவட்ட ஜெலஜா கித்தா சிலாங்கூர் நிகழ்ச்சி 14 மே 2023 அன்று நடைபெறும் என்று முகமட் யாசித் கூறினார்.

“இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார். மேலும் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :