NATIONAL

சிலாங்கூர், கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 19: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்கள் மற்றும் கோலாலம்பூர் முழுவதும் இன்று பிற்பகல் 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவை கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய ஐந்து மாவட்டங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) முகநூல் மூலம் அறிவித்தது.

கெடாவில் உள்ள சில பகுதிகள், பினாங்கு முழுவதும், பேராக், பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள சில மாவட்டங்களிலும் இதே வானிலையைதான் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, அது ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கு மேல் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :