ஷா ஆலம், ஏப்ரல் 19: வெள்ளி மாலை (ஆகஸ்ட் 21) மற்றும் சனிக்கிழமைகளில் சிலாங்கூரில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கணித்துள்ளது.
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிலும் இதே நிலைதான் ஏற்படக்கூடும்.
இவ்வாரம் ஏதோ ஒரு நாளில் ஐடில்பித்ரி பண்டிக்கை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“myCuaca ஆப்ஸ் மற்றும் மெட்மலேசியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்திய வானிலை அறிவிப்புகளை நீங்கள் கவனித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என மெட்மலேசியா இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மெட்மலேசியாவின் சமூக ஊடகங்களான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் பொதுமக்கள் வானிலை குறித்த கூடுதல் தகவல்களை பெறலாம்.