கோலாலம்பூர், ஏப் 20- இன்று காலை 9.07 மணியளவில் சபாவின் பெலூரானில் கடலில் ரிக்டர் அளவில் 3.5 எனப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 பாகை வடக்கு மற்றும் 117.4 பாகை கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் சபாவின் பிடாசிலிருந்து தென்கிழக்கே 37 கிலோ மீட்டர் மற்றும் இந்தோனேசியாவின் தாரகனுக்கு வடக்கே 365 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த பூகம்பத்தால் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/05/earthquake-monitoring-tool-vibration-measurement-is-shown-as-red-line-graph_68708-73-2-960x734.jpg)