கோம்பாக், ஏப்ரல் 22: டத்தோ மந்திரி புசார் நேற்றிரவு இங்குள்ள ஜாலான் கோம்பாக், பத்து 7 இல் கணவன்-மனைவி நடத்தி வரும் லெமாங் யு-டர்ன் கடைக்கு வருகையளித்தார்.
இவ் வருகையின் போது டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பூலூர் அரிசி மற்றும் தேங்காய்ப் பால் கொண்டு லெமாங் உற்பத்தி செய்யும் முறையை காண தவறவில்லை. அதன்பின் லெமாங் எப்படி தயாரிப்பது என்பதை கடையின் உரிமையாளர் முகமட் ஃபட்ஸ்லி இசாஹர் மற்றும் அவரது மனைவி ரோஸ்மரியா இப்ராஹிம் மந்திரி புசாருக்கு செய்து காட்டினர்.
மேலும், இவ் வருகைக்கு முன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தேசிய கால்பந்து ஜாம்பவான் காலிட் அலியை சந்தித்ததோடு, கோம்பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அருகில் உள்ள சூராவில் உள்ளூர் மக்களுடன் தொழுகையில் கலந்து கொண்டார்.