SELANGOR

வாகன நிறுத்துமிட அபராதம் RM15ஆகக் குறைப்பு – சிப்பாங் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூலை 5: சிப்பாங் நகராண்மை கழகம் இம்மாதத்தில் வாகன நிறுத்துமிட அபராதத்தை செலுத்துபவர்களுக்கு, அபராத தொகையை RM15ஆகக் குறைந்துள்ளது.

ஃப்ளெக்ஸி பார்க்கிங் செயலி மூலம் அல்லது சிப்பாங் நகராண்மை கழகத்தில் உள்ள கட்டண கவுண்டரில் அபராதத் தொகையை செலுத்தலாம் என்று உள்ளூர் அதிகார சபை (PBT) தெரிவித்துள்ளது.

“இந்த தள்ளுப்படி ஜூலை 1 முதல் 31 வரை அமலில் இருக்கும்`. மேலும் தகவலுக்கு சிப்பாங் நகராண்மை கழகம் சட்டப் பிரிவை 03-83190200 மற்றும் 03-83190230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது www.mpsepang.gov.my ஐப் பார்வையிடவும்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :