NATIONAL

சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஜூலை 5: சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று முகநூல் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது. மேலும், மலாக்கா மற்றும் கோலாலம்பூர் முழுவதும் இதே வானிலை தான் இருக்கக்கூடும்.

பேராக், கிளந்தான், திரங்கானு, ஜொகூர், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என்று  கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :