NATIONAL

இன்று இரவு வரை ஏழு மாவட்டங்களில் கனமழை

ஷா ஆலம், ஜூலை 6: இன்று சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று  முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இதே வானிலைதான்கோலாலம்பூர், புத்ராஜெயா, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களிலும் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :