SELANGOR

சிலாங்கூர் ஒற்றுமை மடாணி கண்காட்சி

ஷா ஆலம், ஜூலை 6: சிலாங்கூர் ஒற்றுமை மடாணி கண்காட்சியை முன்னிட்டு நடைபெறும் விற்பனையில் 1,500 கோழிகள் மற்றும் 600 பலகை  முட்டைகள் உட்பட பல அடிப்படை பொருட்களை விற்கப்படும்.

லாமன் நியாகா சமூகம், பண்டார் பாரு பாங்கியில் எஹ்சான் ரஹ்மான் விற்பனை (JER) மாலை 5 மணி முதல் இரவு 8 மணி  வரை நடைபெறும் என சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (PKPS) தகவல் தொடர்புத் தலைவர் கடாவி முஸ்லி தெரிவித்தார்.

“நாங்கள் 600 அரிசி மூட்டைகள், 400 மீன் பேக்கட்டுகள், 400 இறைச்சி பேக்கட்டுகள் மற்றும் 150 சமையல் எண்ணெய் பாட்டில்களை வழங்குகிறோம்.

“மேலும், நாங்கள் மாவு, சார்டின் மற்றும் மீகோன் உட்பட 10 உலர் பொருட்களையும் விற்பனை செய்கிறோம்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

எஹ்சான் ரக்யாட் தொடர்ச்சித் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு  உதவும் வகையில் சந்தையை விட 30 சதவீதம் குறைவான விலையில் அடிப்படை பொருட்கள் விற்கப்படுகின்றன. 


Pengarang :