SELANGOR

ஒரு மணி நேரத்திற்குள் 500 கோழிகள் விற்கப்பட்டன

அம்பாங், ஜூலை 12: இன்று தாமான் ஸ்ரீ அம்பாங் பொது மண்டபத்தில் நடைபெற்ற மலிவு விற்பனையில் ஒரு மணி நேரத்திற்குள் 500 கோழிகள் விற்கப்பட்டன.

காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த விற்பனையில் ஐந்து கிலோகிராம் அரிசி நன்றாக விற்பனையானது என்று சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேபிஎஸ்) செயல்பாட்டு மேலாளர் முகமட் ஹஸ்ரி அபு ஹாசன் தெரிவித்தார்.

“கோழி மற்றும் அரிசி ஆகியவை மக்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் ஆகும்,” என்று அவர் குறிப்பிட்டார். .

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :