SELANGOR

ஜெலாஜா மடாணி நிகழ்வு – கோத்தா அங்காரிக் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 18: கோத்தா அங்காரிக் தொகுதியில் ஜெலாஜா மடாணி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 20 ஜூலை அன்று ஷா ஆலம் மாநகராட்சி செக்‌ஷன் 7 லில் உள்ள மேடான் செலெரா வாகன நிறுத்தும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இரவு 8.30 மணி அளவில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோ மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.  கோத்தா அங்காரிக் தொகுதி  ஏற்பாட்டிலான இந்நிகழ்வுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து ஆதரவு வழங்க வேண்டி ஏற்பாட்டுக் குழுவினர்  கேட்டுக் கொள்கிறார்கள்.

Pengarang :