SELANGOR

கோம்பாக் செத்தியாவில் மும்முனைப் போட்டி

கோம்பாக்.ஜூலை.29- சிலாங்கூர் மாநில தேசிய முன்னணித் தலைவரும், அம்னோத் தலைவருமான டத்தோ வீர மெகாட் சூல்கர்னையின் கோம்பாக் செத்தியா சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் மும் முனை போட்டி நிலவுகிறது.

நாட்டில் முதன் முதலாக நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் ஒன்று சேர்ந்து மத்தியத்தில் ஒற்றுமை அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு 6 மாநில தேர்தல் ஏக காலத்தில் நடைபெறுகிறது.

கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று சட்ட மன்றங்கள் உள்ளன. சுங்கைத் துவாவில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளராக மந்திரி புசார் அமிருடின் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் இன்னொரு தொகுதியான கோம்பாக் செத்தியாவில் தேசிய முன்னணியின் சிலாங்கூர் தலைவரான டத்தோ வீர மெகாட் சூல்கர்னையின் போட்டியிடுகிறார். பலம் பொருந்திய இரண்டு கூட்டணிகளின் வேட்பாளர்கள் கோம்பாக் தொகுதியில் உள்ள வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதால் வேட்பு மனு தாக்கல் மிகவும் விருவிருப்புடன் நடை பெற்றது. நாடு தழுவிய அளவில் பெருந் தலைவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.


Pengarang :