SELANGOR

சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பான் -பாரிசான் நேசனல் கூட்டு அரசாங்கத்தை அமைக்கும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 12: ஆறு மாநிலங்களில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) 34 இடங்களில்   வெற்றி பெற்றதன் வழி  , ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பெற்று பக்கத்தான் ஹரப்பான் -பாரிசான் நேசனல்  சிலாங்கூர் மாநிலத்தில்  ஆட்சி அமைக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலில் ஏழு தொகுதிகளை  200 ஓட்டுகளுக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில்  இழந்திருப்பதால்  அது குறித்து ஆய்வுக்கு பின்னர் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்  என  கட்சி வட்டாரங்கள்  தெரிவித்துள்ளது.

சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் 6 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 2 தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் கோத்தா டாமன்சாரா, கோத்தா அங்கெரிக், பத்து தீகா, கோத்தா கெமுனிங், சுங்கை பிலேக் மற்றும் போர்ட் கிள்ளான் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் செமந்தா மற்றும் சிஜாங்காங் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.


Pengarang :