NATIONAL

நான்கு மாவட்டங்களில் பிற்பகல் வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், அக் 2: இன்று சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் பிற்பகல் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவை கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இதே வானிலை தான் கோலாலம்பூர், கெடா, பேராக், பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :