ANTARABANGSA

அரசாங்கத்தின் உதவித் தொகை இவ்வாண்டில் 8,100 கோடி வெள்ளியைத் தாண்டும்- பிரதமர் கூறுகிறார்

கோத்தா கினபாலு, அக் 5- மின்சாரம், எரிபொருள், உணவு மூலம் மத்திய
அரசு மக்களுக்கு வழங்கும் உதவித் தொகையின் மதிப்பு இவ்வாண்டில்
8,100 கோடி வெள்ளியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த உதவித் தொகையின் மதிப்பு அதிகமாக இருந்தாலும் வாழ்க்கைச்
செலவினம் அதிகரித்துள்ள நடப்புச் சூழலில் மக்களின் தேவையைக்
கருத்தில் கொள்ளாமல் உதவித் தொகையைக் குறைப்பது அரசாங்கத்தின்
தேர்வாக நிச்சயம் இருக்காது என்று அவர் சொன்னார்.

ஆகவே, நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும் நிலையில்
அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மானியத் தொகை பகிர்வு முறை
மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் நல்கப்படுவதை உறுதி செய்வதில்
முக்கிய பங்கினை ஆற்றுகிறது என அவர் குறிப்பிட்டார்.

உதவித் தொகை என்பது மக்களின் சுமையைக் குறைப்பதற்கு அரசாஙகம்
மேற்கொண்டு வரும் இடையீட்டுத் திட்டமாகும். கோழி மற்றும்
முட்டைக்கு 380 கோடி வெள்ளி மானியம் வழங்குகிறோம். மக்களின்
வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கும் என்பதால் இந்த மானியத்தைக்
குறைப்பது நமது தேர்வாக அமையாது. ஆகவே, உதவித் தொகையைக்
குறைப்பதற்கு நமக்கு மேலும் நெகிழ்வான கொள்கைகள் அவசியம் என
அவர் சொன்னார்.

மிக அதிகமான உதவித் தொகையை வழங்கும் எந்த நாடும் தாக்குப்
பிடிக்க முடியாது. எனவே, சிலவற்றை நாம் குறைக்கவிருக்கிறோம் என்று
இஸ்லாமிய மேலாண்மை விவகார மாநாட்டை நேற்று இங்கு தொடக்கி
வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.


Pengarang :