ANTARABANGSA

ஆசிய விளையாட்டு- ஸ்குவாஷ் மூலம் நாட்டிற்கு நான்காவது தங்கம் பெற்றுத் தந்தார் சிவசங்கரி

ஹாங்ஸோவ், அக் 6- இங்கு நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில்
வென்றதன் மூலம் நாட்டின் ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ்.சிவசங்கரி
நாட்டிற்கு நான்காவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். நேற்று
இங்கு நடைபெற்ற இப்போட்டியில் ஹாங் காங்கின் சான் சின் யுக்கை
கடும் போராட்டத்திற்கு ப் பின்னர் தோற்கடித்து அவர் தங்கப்பத்தக்கத்தை
வென்றார்.

ஹாங்ஸோ ஒலிம்பிக் ஸ்குவாஷ் மையத்தில் நடைபெற்ற மகளிர்
ஒற்றையர் இறுதியாட்டத்தில் களமிறங்கிய 24 வயதான சிவசங்கரி ஐந்து
சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தை 64 நிமிடங்களில் முடித்து
வெற்றியாளராக வாகை சூடினார்.

ஆசியப் போட்டியின் தொடக்க நிகழ்வில் தேசிய கொடியை ஏந்திச்
செல்லும் வாய்ப்பினை பெற்றவரான சிவசங்கரி கடந்த சனிக்கிழமை
நடைபெற்ற ஸ்குவாஷ் மகளிர் பிரிவு இரண்டாவது தங்கப் பதக்கத்தை
செல்வதற்கு உதவி புரிந்தார்.

கடந்த ஜூன் மாதம் ஹாங் காங்கில் நடைபெற்ற ஆசிய வெற்றியாளர்
கிண்ணப் போட்டியில் சின் யுக்கிடம் அடைந்த தோல்விக்கு இந்த ஆசியப்
போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் உலகின் 37 வது நிலை
விளையாட்டளரான சிவசங்கரி பழி தீர்த்துக் கொண்டார்.


Pengarang :