SELANGOR

பல அரசாங்க குடியிருப்புகள் மறுசீரமைப்பு செய்ய அடையாளம் காணப்பட்டுள்ளன – மந்திரி புசார்

ஷா ஆலம், டிச 1: சிலாங்கூர் அரசாங்கம் பல அரசாங்க குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்ய அடையாளம் கண்டு வருகிறது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அரசுப் பணியாளர்களின் குடியிருப்புகளை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் தனியார் துறையினருடன் இணைந்து கட்டம் கட்டமாக குடியிருப்புகளை அபிவிருத்தி செய்யும் முறையும் உள்ளதாக அவர் கூறினார்.

“முன்பு நிலத்தின் நிலை தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தன, ஆனால் தனியார் துறையின் ஒத்துழைப்போடு அரசாங்கம் நிலத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கான சில தீர்வுகளை நான் ஏற்கனவே கண்டறிந்துள்ளேன்.

“ஷா ஆலமில் உள்ள பிரிவு 8 இல் அடையாளம் காணப்பட்ட பணியாளர் குடி இருப்பிடங்கள்  போன்ற மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது.

“இந்த ஆண்டு (மறுவளர்ச்சி செயல்முறை) செயல்படுத்த வாய்ப்பு இல்லாவிட்டால், அடுத்த ஆண்டுக்கான (மாநில) பட்ஜெட்டின் போது நாங்கள் ஒருங்கிணைப்போம்,” என்று அவர் சிலாங்கூர் மாநில அரசுப் பணியாளர்கள் பேரவையில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், மாநிலத்தில் அரசு பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :