SELANGOR

RM63.25 மில்லியன் அதிக வருவாயை எம்பிஎஸ் வசூலித்துள்ளது

கோம்பாக், ஜன 22: கடந்த ஆண்டு RM63.25 மில்லியன் அதிக வருவாய் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) ஈட்டியுள்ளது.

RM199.9 மில்லியனாக மதிப்பிடப்பட்ட வருவாயுடன் ஒப்பிடுகையில், எம்பிஎஸ் RM249 மில்லியனை வசூலித்ததாகத் தலைவர் கூறினார்.

“டிசம்பர் 31, 2023 வரையிலான எம்பிஎஸ்யின் நிதி நிலையின் செயல்திறன், RM63.25 மில்லியனுக்கு அதிகமான வருமானம் என்ற அடிப்படையில் ஒரு நல்ல சாதனையைக் காட்டுகிறது.

“இது 2022 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட RM51.2 மில்லியன் வருவாயை மிஞ்சியுள்ளது” என்று டத்தோ முகமட் யாசிட் சாய்ரி செத்தியா ஈகோ டெம்ப்ளரில் எம்பிஎஸ் 2023 சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழாவில் இவ்வாறு உரையாற்றினார்.


Pengarang :