NATIONAL

ஐடில்பித்ரி காலம் முழுவதும் போதிய அடிப்படை உணவுப் பொருட்கள் கிடைப்பது உறுதி – வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம்

புத்ராஜெயா, ஏப் 17- விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்கள் மூலம் மலேசியாவின் முக்கிய உணவுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தித் திறனுக்கு ஏற்ப, ஐடில்பித்ரி காலம் முழுவதும் போதிய அடிப்படை உணவுப் பொருட்கள் கிடைப்பதை வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (MAFS) உறுதி செய்துள்ளது.

குறைந்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட உணவுப் பொருட்களின் விநியோகங்கள் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகின்றன என்று அமைச்சு கூறியது.

தேசிய வேளாண் உணவுக் கொள்கை 2021-2030 இல் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு முக்கிய உணவுப் பொருட்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக அறிக்கை ஒன்றில் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

அவற்றில் அரிசி, கோழி, முட்டை, இறைச்சி, காய்கறிகள், பழங்கள், கடல் உணவுகள் மற்றும் பால் ஆகியவை அடங்கும்.

ஃபாமா, விவசாயிகள் கழகம் (எல்பிபி) மற்றும் மலேசியா மீன்வள மேம்பாட்டு ஆணையம் (எல்கேஐஎம்) ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் இந்த முக்கிய உணவுப் பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் ஆதரிக்கப்படும்.

அதே நேரத்தில், குறிப்பாக ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறும் போது, உணவு வீணாக்கப்படுவதைத் தவிர்க்க அதனை கவனமாகப் பயன்படுத்துவதை அமைச்சு ஊக்குவிக்கிறது.

– பெர்னாமா


Pengarang :