ANTARABANGSA

புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூவர் மரணம்- தீ விபத்திற்கு சதிநாச செயல் காரணமல்ல

பாலிக் பூலாவ், மே 27- இங்குள்ள ஜாலான் பாலிக் பூலாவ் சாலையில் உள்ள கடை வீடு ஒன்றில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதற்கு சதிநாச செயல் காரணமல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில்  நுருள் பௌஜ்ஜியா சைடா முகமது (வயது 58), அவரின் மகனான முகமது இப்ராஹிம் (வயது 33) மற்றும் மகள்  ராபியா ஜஸ்மின் (வயது 20) ஆகியோருக்கு ஏற்பட்ட மரணத்திற்கு அவர்கள் அதிகமான புகையைச் சுவாசித்ததே காரணம் என சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிசால் ஜெனால் கூறினார்.

இறந்தவர்களின் உடல் மீது பாலிக் பூலாவ் மருத்துவமனையின் தடயவியல் துறை நிபுணர் மேற்கொண்ட சோதனையில் அதிகப்படியான புகையைச் சுவாதித்த காரணத்தால் அவர்களுக்கு மரணம் நேர்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

ஜாலான் பாலிக் பூலாவ் சாலையிலுள்ள அந்த இரட்டை மாடி கடை வீட்டில் நேற்று முன்தினம் காலை 7.00 மணியளவில் நிகழ்ந்த தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Pengarang :