SELANGOR

கிள்ளான், பெட்டாலிங் மாவட்டங்களில் மாலை வரை கனமழை பெய்யும்

ஷா ஆலாம், 29 மே: ஹுலு சிலாங்கூர்,  கிள்ளான் , பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் செபாங் ஆகிய இடங்களில் மாலை 5 மணி வரை கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

கெடா, திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் சபாவில் பல பகுதிகளுக்கு மேலதிகமாக புத்ரா ஜெயாவை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியா  முகநூலில், இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மிமீக்கு மேல் இருக்கும், அது உடனடி அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படும்.

பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Pengarang :