ANTARABANGSA

கார் தீப்பற்றியதில் முதியவர் கருகி மாண்டார்- ஈப்போவில் சம்பவம்

ஈப்போ, மே 30-  இங்குள்ள டேசா லாசா, ஸ்ரீ குவாங் 3 வழித்தடத்தில்  நேற்றிரவு கார் ஒன்று  தீப்பிடித்ததில் 71 வயது முதியவர் உடல் கருகி மாண்டார்.

இச்சம்பவம் தொடர்பில்  இரவு 11.46 மணியளவில்
தகவல் கிடைத்ததை தொடர்ந்து எட்டு பேரடங்கிய தீயணைப்புக் குழு  எட்டு நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக  பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்  நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர்  சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

இந்த தீ விபத்தில் அந்த முதியவர் பயணம் செய்த புரோட்டான் சாகா ஈஸ்வரா ரக கார் 90 விழுக்காடு அழிந்ததாக அவர் சொன்னார்.

காரில் இருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தீயை அணைக்கும் பணி அதிகாலை 2 மணியுடன் முடிவடைந்தது என்று அவர்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :