SELANGOR

இன்று ஜாப் கேர் கார்னிவல் – பெட்டாலிங் ஜெயாவில் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 17: இன்று நடைபெறும் சிலாங்கூர் ஜாப்கேர் கார்னிவலில் மொத்தம் 24 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) இணைந்து நடத்தும் நிகழ்ச்சி ஹோரிசோன் பேங்க்வெட் ஹால், நிலை 3A மெனாரா பிஏசி, பெட்டாலிங் ஜெயாவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.

“இந்நிகழ்வில் ஜெயா குரோசர், 99 ஸ்பீட் மார்ட், போஸ் மலேசியா பெர்ஹாட், கன்சோர்டியம் லெபோராயா உத்தாரா-திமோர், ரூமா ஹோம், மேக்சிஸ் நியாகா மற்றும் பல நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://bit.ly/JobcarePJ என்ற இணைப்பின் மூலம் வருகையை உறுதிப்படுத்த பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் வருமானத்தை இழந்த நபர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசாங்கத்தின் முன் முயற்சியாகும்.


Pengarang :