ANTARABANGSA

சோங் இடைநிலைப் பள்ளி தங்கும் விடுதியில் தீ- மாணவர்கள், வார்டன்கள் உயிர் தப்பினர்

காப்பிட், ஜூலை 22-  சோங் 1 இடைநிலைப் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு வார்டன்களும் இரு மாணவர்களும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

இந்த தீ விபத்து தொடர்பில் நேற்று மாலை 4.15 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்த பள்ளிக்கு  சோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்புக் குழுவினர் விரைந்து சென்றதாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் கூறினார்.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த மாணவர் தங்கும் விடுதியில் தீ ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அ கட்டிடத்தின் மேல் மாடியின் 60 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிருடற் சேதம் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், தீக்கு காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :