பாரிஸ், ஆகஸ்ட் 4 – பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கான சவாலில் உலகின் முன்னணி ஜோடியான சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங்கிடம் 19-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.
மலேசிய ஆடவர் இரட்டையர் ஜோடி ஏரோன் சியா-சோ வூய் இக் மலேசியாவுக்கு ஒரு வெங்கல பதகத்தையாவது வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை ஜோடியான டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முசென் ஜோடியிடம் இருந்து கடும் சவாலை எதிர் கொண்டு 16-21, 22-20, 21-19 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.
இந்த முறை அவர்கள் ஒரு தங்கம் அல்லது வெள்ளி பெறும் வாய்ப்பை இழந்தாலும், ஒரு வெண்கலப் பதக்கம் கூட நாட்டிற்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் அர்த்தம் உள்ளது என்று சியா கூறினார்.