பாரிஸ், ஆகஸ்ட் 6 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 10 வது நாளான நேற்று பதக்க வரிசையில் சீனா மீண்டும் முன்னணிக்கு வந்தது. நேற்று ஒரே நாளில் 2 தங்கம் 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பெற்ற அந்த நாடு முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை விட கூடுதலாக 1 தங்கத்தை பெற்று அமெரிக்காவை பின் தள்ளியது.
மலேசியர்கள் எதிர்பார்த்து பேன்று பூப்பந்து விளையாட்டில் நாடு மேலும் ஒரு பதக்கம் பெற்றது, ஆனால் அது தங்கமோ, வெள்ளியோ அன்றி வெண்கலமாக அமைந்தது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் மூன்றாம் நிலைக்கான போட்டியில் மலேசியாவின் சீ ஜியா, இந்திய வீரர் லக்ஷ்யா சென்னை எதிர்த்து 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மலேசியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கத்தை அவர் வென்றனர்