ஷா ஆலம், 31 மார்ச்: கோலா சிலாங்கூர் மாவட்ட ஆட்சியரை உடனடியாக புக்கிட் செராக்கா சீன இடுகாடு விவகாரத்தை களைய ஆவன செய்ய ஆணையிடப்பட்டது.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி,மாநில அரசாங்கம் கடந்த மார்ச்ல்சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
கோல சிலாங்கூர் மாவட்ட கழகத்தின் அனுமதி பெறும் வரையில் உள்ளே செல்லும் சாலை நிர்மாணிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
” கார் நிறுத்துமிடம் மற்றும் நில வரைபடத்தையும் சம்பந்தபட்ட நிறுவனம் சமர்பிக்க வேண்டும்.” என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் நன்றி தெரிவிக்கும் உரையின் பொழுது மாநில சட்டசபையில் தெரிவித்தார்.