SELANGOR

உடல் ஊனமுற்றோர் கார் நிறுத்துமிடத்தில் இருந்த மோட்டார் வண்டியை எம்பிகே பறிமுதல்

கிள்ளான், ஜூலை 5:

உடல் ஊனமுற்றோர் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட  இரண்டு மோட்டார் வண்டிகளை கிள்ளான் நகராண்மை கழகம் பறிமுதல் செய்தது. கிள்ளான் நகரத்தில் பாதாய் லாவுட் சாலையில் ஏறக்குறைய மாலை 2.25 மணிக்கு மேற்கண்ட நடவடிக்கை மேற்கொண்டதாக கிள்ளான் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ முகமட் யாஸிட் பீடின் கூறினார். பொது மக்களின் புகார் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் பட்டதாகவும் கூறினார்.

எம்பிகே விதிமுறைகளை பின்பற்றாத குற்றங்களை ஒரு போதும் அனுசரிக்காது என்று தெளிவுபடுத்தினார்.

” புகார் கிடைத்த பின், அந்த இடத்திற்கு விரைந்த அமலாக்க அதிகாரிகள், மேற்கண்ட மோட்டார் வண்டிகள் உடல் ஊனமுற்றோர் கார் நிறுத்துமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு எம்பிகேவின் வாகன சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று கூறினார்.

YDP MPK

 

 

 

 

 

 

இதனிடையே, மேலும் விவரிக்கையில் யாஸிட் பேரங்காடிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் ஆகிய இடங்களிலும் தவறான முறையில் கார் நிறுத்துமிடம் பயன்படுத்துவதை எம்பிகே கண்காணிப்பு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். உடல் ஊனமுற்றோர் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை எம்பிகே சம்மன், பூட்டு அல்லது பறிமுதல் செய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#கேஜிஎஸ்


Pengarang :