கிள்ளான், ஜூலை 10:
கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற தொகுதியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் பொது மக்கள் 500 பேர் திரண்டனர். கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற சேவை மையத்தின் முன் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு பல்லின மக்கள் கலந்து கொண்டு பல்சுவை உணவுகளான ரெண்டாங், லெமாங், கெதுபாட், நாசி லெமாக், சாத்தே, ரொட்டி சானாய் மற்றும் சென்டோல் போன்றவைகளை உண்டுக் களித்தனர்.
” எல்லா இன மக்களும் திரண்டு வந்துள்ளனர். இதுவே மாநில அரசாங்கத்தின் வெற்றியாகக் நான் நினைக்கிறேன். சிலாங்கூரில் நடக்கும் இந்த மாற்றமே மலேசிய ரீதியில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்,” என்று கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற உறுப்பினர் கணபதி ராவ் சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட், கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாமுட் மற்றும் மோரிப் சட்ட மன்ற உறுப்பினர் ஹாஸ்னூல் பஹாருடின் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இதே நிகழ்ச்சியில், கணபதி ராவ் பொது மக்களோடு கலந்து உரையாடி வரவேற்று உபசரித்தார். மேலும் 11 சூராவ்களுக்கும் மற்றும் மூன்று பள்ளிவாசல்களுக்கும் ரிம 40,000 உதவி நிதிகளை வாரி வழங்கினார். பல அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், மாநகராட்சி மற்றும் நகராண்மை கழக உறுப்பினர்கள், இந்திய கிராமத்து தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.
#கேஜிஎஸ்