SELANGOR

நான்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலாங்கூர் சட்ட மன்ற கூட்டத் தொடருக்கு வருகை புரிந்தனர்

ஷா ஆலம், ஜூலை 24:

சிலாங்கூர் சட்ட மன்றம் தொடர்ந்து அனைத்துலக அங்கீகாரத்தை பெற்றது. நான்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2017-இன் சிலாங்கூர் சட்ட மன்ற 13வது கூட்டத் தொடரில் வருகை புரிந்து மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை சேர்ந்த டேவிட் ஹேமஸ், கிரீஸ் லெஸ்லீ, பாரோனஸ் நோர்த்ஹோவர் மற்றும் ஆர்டி ஹோனரபல் ஜோன் விட்டிங்டேல் ஆகியோர் சிலாங்கூர் சட்ட மன்ற கூட்டத் தொடரில் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியுடன் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களின் சந்திப்பு சட்ட மன்ற கட்டிடத்தின் மந்திரி பெசாரின் அறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

IMG_1085 IMG_1084


Pengarang :