NATIONAL

மலேசிய சீர்காழி கோவிந்தராஜன் புகழ் இராஜராஜ சோழன் இயற்கை ஏய்தினார்

மலேசியா நாட்டின் தலைசிறந்த கலைஞர், சீர்காழி கோவிந்தராஜன் புகழ் இராஜராஜ சோழன் மாரடைப்பால் இன்று மாலை 3.46 மணிக்கு இறந்து விட்டதாக குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர்.

இன்று இரவு 8 மணிக்கு அன்னாரின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் ஷா ஆலம் இல்லத்திற்கு கொண்டு வரப்படும். அன்னாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அன்னாரின் இல்லமான எண்.20, ஜாலான் கிரிஸோபெரில் 7/20, செக்சன் 7, ஷா ஆலம் வந்து மரியாதை செலுத்தலாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு சிலாங்கூர் இன்றுவின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் கு.குணசேகரன்


Pengarang :