NATIONAL

கிளந்தானில் அரசியல் நியமனங்கள் தொடரும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16:

கிளாந்தான் மாநில மந்திரி பெசார் டத்தோ அமாட் யாக்கோப் அறிக்கையின் அடிப்படையில் கெஅடிலான் கட்சியின் அனைத்து அரசியல் நியமனங்கள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் தமது நிர்வாகத்தில் கெஅடிலான் கட்சியின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுவதாக கூறியது தெரியவந்துள்ளது.

keadilan

 

 

 

 

 

கெஅடிலான் கட்சியின் கிளாந்தான் மாநில தலைவர், அப்துல் அஸிஸ் அப்துல் காதிர் கூறுகையில், நேற்று நடந்த கெஅடிலான் கட்சியின் அரசியல் பிரிவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

தமது அறிக்கையில், அப்துல் அஸிஸ் கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் அனைத்து அரசியல் பிரிவு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தம் மீது நம்பிக்கை வைத்து கிளாந்தான் கெஅடிலான் கட்சியை வழி நடத்தி எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் கட்சியை வலுப்படுத்த வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

#கேஜிஎஸ்


Pengarang :