ஷா ஆலம், ஆகஸ்ட் 28:
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வார். 14-வது பொதுத் தேர்தலை முன்வைத்து அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு செயல்பட பேச்சு வார்த்தைகள் தொடரும் என்று கூறினார்.
” 14-வது பொதுத் தேர்தலில் அனைவரும் எந்த முறையில் ஒத்துழைக்க முடியும் என்று கவனம் செலுத்த வேண்டும். பொது மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
இதற்கு முன்பு, அஸ்மின் கூறுகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி புத்ரா ஜெயாவின் நிர்வாகத்தை கைப்பற்றும் பலத்தை பெற்றுள்ளது. ஒரே அணியில் இருந்தால் அம்னோ தேசிய முன்னணியை விட அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
#கேஜிஎஸ்