SELANGOR

சிலாங்கூர் ‘புரூட் வேலி’, தங்க விருதை வென்றது

ஷா ஆலம், நவம்பர் 22:

கடந்த நவம்பர் 20-இல் புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெற்ற மலேசிய சுற்றுலாத்துறையின் தங்க விருது விழா நிகழ்ச்சியில் சிலாங்கூர் ‘புரூட் வேலி’ விவசாய சுற்றுலா அனுபவ தங்க விருதை தட்டிச்சென்றது. முதன்முறையாக நடத்தப்படும் இந்த விருது விழாவில் 39 விருதுகள் வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய சுற்றுலாத்துறையில் சிறந்த சேவையை வழங்கி வந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் டாலான் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து பேசிய போது சிறந்த அடைவு நிலையை எட்டியவர்களை கண்டிப்பாக கௌரவிக்கப் பட வேண்டும் என்றார். இதன் மூலம் அவர்கள் மேலும் சிறந்த சேவையை வழங்கி வர ஊக்குவிப்பாக அமையும் என்று விவரித்தார்.

 

 

 

 

#வீரத் தமிழன்


Pengarang :