SELANGOR

உலகத்தில் முதல் விவேக மாநிலமாக சிலாங்கூர் விளங்கும் !!!

எதிர் வரும் 2025-இல் சிலாங்கூர் மாநிலம் ‘விவேக மாநிலம்’ அல்லது ‘ஸ்மார்ட் ஸ்டேட்’ தரத்தை அடைய ஏற்பாடுகளை மாநில அரசு எடுத்து வருகிறது என்று மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். இந்த இலக்கை எட்ட கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய வணிகத்தை (எஸ்ஐதிஇசி) உருவாக்கியதாக கூறினார்.

எஸ்ஐதிஇசி, மலேசிய இணைய பொருளியல் மன்றத்தின் அரசு நிறுவனங்களில் சிறந்த இணைய வணிக விருதை தட்டிச் சென்றது மாநிலத்திற்கு பெருமை சேர்த்த ஒன்று என அமிரூடின் கூறினார்.


Pengarang :