ஷா ஆலம், மார்ச் 26-
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடாடோவின் தாயார் நேற்றிரவு காலமானதைத் தொடர்ந்து அன்னாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். அன்னாரின் ஆதமா சாந்தியடை வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக அமிருடின் கூறினார்.
இவ்வேளையில், தமது அன்னையில் இழப்பை பாக் ஜோகோவி திடமான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது இரங்கல் செய்தியில் கேட்டுக் கொண்டார். மத்திய ஜாவாவில் உள்ள சோலோவில் அல்லாயர்ஹாம் சுஜியாத்மி (வயது 77) நேற்று மாலை 4.45 மணியளவில் காலமானதாக ஊடங்களும் உள்நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவிக்கப்பட்டது.