கிள்ளான், டிசம்பர் 12:
சிலாங்கூர் அரச பேரவை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமட் அலி ஆகியோர் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வழங்கிய அரச பதக்கங்களை கடந்த டிசம்பர் 7-இல் திருப்பி கொடுத்து விட்டதை உறுதிப் படுத்தியது. இந்த தகவலை சிலாங்கூர் அரச பேரவையின் செயலாளர் ஹானாபீஃசா ஜாய்ஸ் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிக்கையில், மேற்கண்ட பதக்கங்களை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு, துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரின் துணைவியார் சிலாங்கூர் சுல்தானிடம் பெறப்பட்ட உயரிய விருதுகளை திருப்பி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவை தான் சுயமாக எடுத்ததாக அறிவித்தார்.