NATIONAL

முன்னாள் தலைமை ஆணையர் எஸ்பிஆரின் ஏமாற்றுவேலையை அம்பலப்படுத்த இருக்கிறார்

ஷா ஆலம், ஜனவரி 7:

முன்னாள் அரசாங்கத்தின்  தலைமை பொறுப்பில் இருந்த டான்ஸ்ரீ அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி நடத்தவிருக்கும் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்தார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த அப்துல் ரஷீத் தனக்கு சரியான முறையில் வாய்ப்பு வழங்கினால் கண்டிப்பாக எஸ்பிஆரின் ஏமாற்று வேலைகளை விளக்கம் அளிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த விளக்கங்களை அளிக்க மிக நீண்ட நேரம் பிடிக்கும் என்று விவரித்தார்.

”  கண்டிப்பாக விளக்கம் அளிப்பேன், ஆனால் சிறப்பு அங்கமாக ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது இந்த விளக்கங்களை கொடுக்க நேரம் இல்லை,” என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் 2018-ஆம் ஆண்டின் மாநாட்டில் தனது உரையில் குறிப்பிட்டார்.

#தமிழ் பிரியன்


Pengarang :