NATIONAL

இளைய வாக்காளர்களே 14-வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர்கள்?

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 4:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் வெற்றியை முடிவு செய்வது இளைய வாக்காளர்களே ஆகும் என்று கெஅடிலான் கட்சியின் வியூக இயக்குனர் சிம் ஸி ஸின் கூறினார். 60% வாக்காளர்கள் 21 வயதில் இருந்து 50 வயது கொண்டவர்களாக இருக்கின்றனர். அதில் 25% இளையோர் ஆகும் என்று விவரித்தார்.

”   இளையோர்களை கவரவே சமூக வலைதளங்களை கெஅடிலான் பயன்படுத்துகிறது. இவர்களே தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர்கள்,” என்று கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சமூக வலைதளங்களின் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :