NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: சிலாங்கூர் அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ளது

ஷா ஆலாம், ஏப்ரல் 10:

சிலாங்கூர் மாநிலம் மலேசியாவிலேயே மிக அதிகமான வாக்காளர்களை பதிவு செய்துள்ளது என்று மலேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. எதிர் வரும் மே 9-இல் நடக்கவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் 2,415,074 வாக்காளர்களை பெற்றிருக்கும் என்று எஸ்பிஆர் அதிகாரப்பூர்வ பதிவேற்றம் செய்துள்ளது. இதில் 2,388,614 பேர்கள் சாதாரண  வாக்காளர்கள் என்றும், ராணுவ, காவல்துறை மற்றும் அவர்தம் துணைவியார் (25,462) மற்றும் வெளிநாட்டில் 998 வாக்காளர்களும் அடங்குவர்.

மேலும், சிலாங்கூர் மாநிலம் 30-இல் இருந்து 39-வரை வயதுள்ள வாக்காளர்களை மொத்தம் 573,817 அல்லது 23.76% கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


Pengarang :