NATIONAL

சிலாங்கூர் சட்ட மன்ற தொகுதிகளின் பங்கீடு முடிவடைந்தது

ஷா ஆலம், ஏப்ரல் 16:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளின் சிலாங்கூர் மாநில சட்ட மன்றங்களின் தொகுதி பங்கீடு சுமூகமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது என்று கூட்டணியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். வேட்பாளர்களின் பெயர்கள் வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

”  ஆண்டவன் ஆசியில் அனைத்தும் நல்லபடியாக முடிந்து விட்டது. வேட்புமனு தாக்கல் நாளை எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கபடும். கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனை கொண்ட தலைவர்களால் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது,” என்று ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநிலத்தின் பள்ளிகளுக்கான உதவி நிதிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.


Pengarang :