அலோர் ஸ்தார், ஏப்ரல் 22:
கெஅடிலான் கட்சியின் 14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் வெகு விரைவில் அறிவிப்பார் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தற்போது கெஅடிலான் கட்சி, நாடு முழுவதும் போட்டியிட இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்களை ஆராய்ந்து வருகிறது என்று கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி கூறினார்.
” கெஅடிலான் கட்சியின் வேட்பாளர்களை நானும் மற்றும் கட்சியின் தலைவரும் பல முறை கலந்து பேசி இறுதி முடிவு எடுத்துள்ளோம். ஆனாலும் , கட்சியின் பாரம்பரிய நடைமுறையை பின்பற்றி ஒரு நாளில் கட்சியின் தலைவர் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பார்,” என்று செய்தியாளர்களிடம் பேசினார்.