NATIONAL

ஊழல்வாதத்தை ஒழித்துக்கட்ட கெஅடிலான் சின்னத்தில் வாக்களியுங்கள்!!

கிள்ளான்,மே02:

நாட்டில் ஊழல்வாதத்தை ஒழித்துக்கட்டவும் லஞ்சம் முற்றாக குழித்தோண்டி புதைக்கவும் கெஅடிலான் சின்னத்தில் வாக்களியுங்கள் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் ஜனநாயக ரீதியில் ஊழல்வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இறுதிநாள்.60ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சிக்கு மே 9 ஆம் நாள் இறுதி நாளாகட்டும்.தேசிய முன்னணியை குழித்தோண்டி புதைப்போம் வாரீர் என அஸ்மின் அலி கோரிக்கை விடுத்தார்.

வாக்களிக்கும் போது மிகவும் நிதார்னமாகவும் தெளிவாகவும் பார்த்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய அஸ்மின் தராசு சின்னத்தை புறக்கணித்து கெஅடிலான் (கண்) சின்னத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணிதான் ஆட்சி செய்யும்.தேசிய முன்னணியோடு கைகோர்த்திருக்கும் சில காளான் கட்சிகள் எல்லாம் இந்த தேர்தலோடு காணாமல் போகும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

சுமார் 10,000 பேர் முன்னிலையில் உறையாற்றிய போது அஸ்மின் இதனை கூறினார்.அவரோடு அமானா தலைவர் மாட் சாபு,சுங்கை கண்டிஸ் வேட்பாளர் சுஹாய்மி ஷாஃபி ஆகியோரும் உடன் இருந்தனர்.

தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள எழுச்சி சரியான நேரத்தில் எழுந்திருப்பதாகவும் இது நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :